Sunday, May 29, 2011

இதுவும் ஒரு வகை

எச்சரிக்கை:இது தொழிற்சார் பதிவு.

கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.



மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.

மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.



எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.

Saturday, May 28, 2011

உத்திரமேரூர்

அவ்வப்போது செங்கல்பட்டை தாண்டி செல்லும் போது இவ்வூர் தகவல் பலகை கண்ணில் பட்டாலும் அங்கு இருக்கும் கோவில்கள் மற்றும் பொக்கீழியிங்களை பற்றி அவ்வளவாக தெரிந்திருந்து வைத்திருக்கவில்லை. அவ்வப்போது நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஒருவர் அங்கு நடக்கும் புனரமைப்பை சொன்ன போது என்றாவது ஒரு நாள் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது.ஆயிரம் வருடங்களுக்கு மேலான தொண்மையான வழக்கங்களை (குடையோலை) கற்களில் செதுக்கி வைத்துள்ளார்கள். பழந்தமிழை படிக்கமுடிந்தவர்களுக்கு அருமையான விருந்து.

மாமண்டூரை தாண்டியதும் வலது பக்கத்தில் போக ஒரு அறிவிப்பு பலகை இருக்கும்,அவ்வழியே போனால் உத்திரமேரூரை அடையலாம்.





சரியான அறிவிப்பு பலகை இல்லாததால் பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே இவ்விடம் இருந்தாலும் மகிழுந்து ஓட்டும் போது சாலையிலேயே கவனம் இருப்பதாலும் கவனிக்க முடியாமல் நேரே இருக்கும் சுந்தர வரதராஜ கோவிலுக்கு போய் அருகில் இருக்கும் இடத்தில் மகிழுந்துவை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருப்பட்வர்களை கேட்டு இந்த கோவிலுக்கு வந்தோம்.சிறிய கோவில் சுற்றி உள்ள கற்களில் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்கள் அங்கங்கே தெலுங்கு எழுத்துக்களையும் காணமுடிந்தது.பழைய தமிழுக்கு இக்கால தமிழ் மொழியாக்கத்தை வாசலில் போட்டிருக்கும் பலகையில் போட்டிருந்தார்கள். நாங்கள் போன நேரம் இளம் மாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை.





பழைய தமிழை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சுந்தரவதனராஜ கோவிலுக்கு போனோம்.இக்கோவிலை பார்த்து தான் பெஸன்ட் நகரில் இருக்கும் அஸ்டலக்ஷ்மி கோவிலை கட்டினார்களாம்.எப்போதோ ஒரு முறை அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போயிருந்ததால் அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை.



கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.



ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.



கோபுர அழகு.

Monday, May 16, 2011

மாமல்லபுரம்.

ஒரு சில வாரங்களாகவே மகிழுந்துவில் நெடுந்தூரம் செல்லாமல் இருந்ததை நிவர்த்தி செய்யும் விதமாக காலையில் முடிவு செய்து மதியம் 2.50க்கு வீட்டை விட்டு கிளம்பி மத்திய கைலாஸ் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை மூலம் மாமல்லபுரம் போனோம்.சுமார் 1.45 மணி நேரம் ஆனது.மிக மோசமான சாலை என்று சொல்ல முடியாவிட்டாலும் அபாயகரமான சாலை என்றே சொல்லலாம்.இம்முறையில் இரண்டு முறை மாடுகளை இடிக்கப்பார்த்தேன் நல்ல வேளை தப்பித்தேன். சாலை தடுப்பு என்ற முறையில் அங்கங்கே கம்பி போர்ட்டுகளை வைத்திருப்பது வேகத்தை கட்டுப்படுத்தினாலும் ஒருபக்க வாகனங்களை மற்றொரு பக்க வாகனம் கவனித்து வழிவிட்டாலொழிய அவ்விடமும் விபத்து ஏற்படுதக்கூடிய நிலையிலேயே தான் உள்ளது.

பின்காலை பொழுதிலேயே சிறிதாக தலைவலி ஆரம்பித்திருந்தாலும் வெளியில் போனால் சரியாகிவிடும் என்று நினைத்ததற்கு நேர் எதிராக சதிராட்டம் போட்டது.சிற்பங்களை அனுபவித்து பார்க்கவிடாமல் கவனத்தை சிதரடித்தது.நாங்கள் பார்த்த சில படங்கள் உங்களுக்காக...

















கடற்கரை கோவிலை பார்ப்பதற்கு முன்பு குளிர் ஜூரம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாலும் ஒரு வழிச்சாலை என்று திருப்பித்திருப்பி ஒரே சாலையில் பயணித்த வெறுப்பும் கூடியதால் அதை பார்க்கமாலேயே வெளியேறினோம்.

வண்டியில் எனக்கு குளிர மனைவிக்கு வேர்க்க மாற்றி மாற்றி குளிர்விப்பானை போட்டு கிண்டி வந்த நேரத்தில் தொண்டை வரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வாந்தி பக்கென்று வெளியே வந்தது.அவசரமாக வண்டியை ஓரம்கட்டி பார்க்கிங் விளக்கை போட்டுவிட்டு வெளியே ஓடி தலையை பிடித்து கொஞ்சம் கொட்டிவிட்டு மறுபடி வண்டியை எடுத்து வீட்டுக்கு வந்தோம்.